Blogger templates

புதன், 16 செப்டம்பர், 2020

ஜே.இ.இ தேர்வில் வெற்றி; அசத்திய அரசு பள்ளி மாணவி தேர்ச்சி - குவியும் பாராட்டுக்கள்.!

 

ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று அசத்திய திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி. குவியும் பாராட்டுக்கள்.

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜே.இ.இ. என்கிற இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வை எழுதிய திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த சௌந்தர்யா என்கிற மாணவி ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் மெயின் தேர்வில் 77.9 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தி உள்ளார்.

திருப்பூர் மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் படித்து ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்கிற பெருமையை சௌந்தர்யா பிடித்துள்ளார். இதைப்பற்றி மாணவி சௌந்தர்யா கூறியது; நான் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொண்டு படிப்பேன்.

நான் ஜேஇஇ தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதற்கு தனியாக பயிற்சி மையத்தில் சேரவில்லை.

நான் வகுப்புகளில் படிப்பதோடு சரி. எனக்கு சிறப்பாக ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர். நான் பன்னிரண்டாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன். ஐஐடியில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் படித்து அதில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இதனால் நுழைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது அப்பா வெள்ளிங்கிரி, கார்பென்டர். அம்மா சரஸ்வதி, இல்லத்தரசி

0 comments:

கருத்துரையிடுக

6-8 ENGLISH POEM QUESTIONS QUIZ

TET QUIZ ENGLISH POEM (6-8)  

 
Blogger Templates